'மாநில உரிமைகளை பறிக்கும் செயல்' : நீட் விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் கொந்தளிப்பு
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றும், 24-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது பல்வேறு விவாதங்களை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் எச். ராஜா உள்ளிட்டோர் நீட் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பிற செய்திகள் :
- நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை
- முத்தலாக் தீர்ப்பு வெற்றியை கொண்டாட ஷயரா பானு அழைப்பு
- டிவிட்டரில் கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த மித்தாலி
- முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்